Last Updated:Mar 09, 2026 6:11 PM IST
இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுக நிர்வாகி தனது வீடாக மாற்றியது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பாலுசாமி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார். தீவிர விசாரணை மேற்கொண்டு தமிழக பொது சுகாதாரத் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை, வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர், தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையமா?
திமுக நிர்வாகியின் வீடா?
கோவை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சொந்த வீடாக மாற்றியுள்ள திமுக நிர்வாகி.
மாரத்தான் அமைச்சர் மா.சு. சொன்ன தரமான மருத்துவ கட்டமைப்பு இது தானா?
திமுக-வினர் மக்களின் நிலங்களை அபகரிப்பதில் இருந்து முன்னேறி, தற்போது அரசுக்… pic.twitter.com/PdRRJn9xQs
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) March 9, 2026
கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பாலுசாமி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் திமுக நபர் தங்கியதற்கு யார் அனுமதி வழங்கியது? எத்தனை நாட்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்? இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளனரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவாதம் அளித்தார்.
கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய திமுக நிர்வாகி... விசாரணைக்கு உத்தரவிட்ட சுகாதாரத்துறை!
.png)





English (US) ·