Last Updated:Mar 09, 2026 7:33 PM IST
Trisha | த்ரிஷா விவகாரம் சர்ச்சையான நிலையில் அது தொடர்பாக நடிகர் பார்த்திபன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்திருக்கிறது.

நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் உள்ளதாக குற்றஞ்சாட்டி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில் விஜயும் த்ரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன், குந்தவை இப்போது வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது என்று குந்தவை கெட்டப்பில் காண்பிக்கப்பட்ட த்ரிஷா படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினையாற்றிய நடிகை த்ரிஷா, அடிப்படை அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் தாழ்ந்த சொற்கள் யாரை நோக்கி வீசப்படுகிறதோ, அவரை விட, அந்தச் சொற்களைப் பேசுபவரின் தரத்தைத்தான் பிரதிபலிக்கும் என காட்டமாக பதிலளித்திருந்தார்.
மைக்கைப் பிடித்துப் பேசுவதால் ஒருவர் சொல்லும் கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது என்றும் அது ஒரு முட்டாள்தனமான கருத்து என்றும் சாடியுள்ளார். ஒரு தனிநபரின் வேண்டுகோளுக்கிணங்க தனது பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்வில் சேர்க்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டதாகவும் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார்.
நடிகை த்ரிஷா குறித்த தனது கருத்துக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வருத்தம் தெரிவித்து 'எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது என்றும் இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து இன்று, "த்ரிஷாவை நான் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன் இந்த நேரத்தில். த்ரிஷாவுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்" என்று வீடியோவில் பேசியுள்ள அவர், அதே பதிவில், "கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்... விடியலாக முழு வீடியோவே வரும்!" என்று கூறிய நடிகர் பார்த்திபன் மாலை 6 மணிக்கு விரிவான வீடியோ வரும் என்றிருந்தார்.
ஆனால் எதிர்பார்த்தபடி 6 மணிக்கு வீடியோ வெளியாகவில்லை. அது ஏன் என்று விளக்கமளித்துள்ள பார்த்திபன், "மணி ஆறாச்சி! வீடியோவை வெளியிடாம வேற என்ன ஆராய்ச்சி! கேள்வி நியாயம்!" சரியாக ஆறு மணியடிக்க அரைமணி நேரம் இருக்கும் போது ஒரு ரிங் டோன். எதிர் மூலையிலிருந்து ஒரு மூளை 'உங்க ப்ரோமோ பார்த்தேன், அந்த வீடியோவை வெளியிடாம இருக்கக் கூடாதா?' கேள்வி எனக்கு அதிர்ச்சியை ஒரு பங்கும் ஆச்சரியத்தை மூன்று பங்கும் தந்தது
காரணம் கேட்டேன்... "ஏற்கனவே உங்க சைட்ல பாசிட்டிவ் தானே போய்கிட்டிருக்கு, இதோட விட்டுவிடலாமே?" என்றது. விட வேண்டாமெனத் தோன்றியதால் ஒதுக்கி வைத்ததையும் இணைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் தெளிவாக விரைவில்…..!" என்று கூறியிருக்கிறார்.

ஏ.சி.க்களின் விலையை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்த்திய நிறுவனங்கள்...!
மூலப்பொருட்கள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏசி விலை 15% உயர்வு
மத்திய அரசின் புதிய தரக்கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணி மாற்றங்களே காரணம்
வோல்டாஸ், எல்ஜி, டைகின் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன
.png)





English (US) ·