இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத சரண்யா.. முருகனை வைத்து கணவர் கதையை முடித்த கொடூரம்.. விசாரணையில் பகீர்

19 hours ago 11

Crime News: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவரது மனைவி சரண்யா தனது கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. 

1 Min read

Published : Mar 09 2026, 08:52 PM IST

14

Image Credit : stockPhoto

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சுதிக்‌ஷன் (9) என்ற மகனும் யக்சிதாஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர்.

24

Image Credit : Asianet News

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சரண்யா தனது குழந்தைகளுடன் குமாரபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சதீஷ்குமார் திடீரென கடந்த 3-ம் தேதி மாயமாகினார். இதுகுறித்து மனைவி சரண்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பி.ஏ.பி வாய்க்காலில் காணாமல் போன சதீஷ்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

34

Image Credit : Asianet News

பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில், சரண்யாவின் பெரியம்மா மகளான சுகன்யாவின் கணவர் முருகன்(45) என்பவருக்கும் சரண்யாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த கணவர் சதீஷ்குமார் மனைவி சரண்யா மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர்.

44

Image Credit : Google

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முருகன் தனது நண்பர்கள் கோபிநாத் (30), சிவலிங்கம் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது சதீஷ்குமார் குமாரபாளையத்தில் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்க வந்தார். இந்த தகவலை சரண்யா கள்ளக்காதலன் முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவ்வழியாக வந்த சதீஷ்குமாரிடம் முருகன் உள்ளிட்ட 4 பேரும் வழிமறித்து அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சரண்யா, கள்ளக்காதலன் முருகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Entire Article