சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்றோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்களை எடுத்தது.
Published:13 mins agoUpdated:13 mins ago

அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்றோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்களை எடுத்தது.
இந்திய அணி
இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஷான் கிஷன், "டி20 உலகக்கோப்பைக்கு முன் கார் விபத்தில் நான் என் சகோதரியை (cousin sister) இழந்துவிட்டேன். அவளை நினைத்துதான் நான் இறுதிப்போட்டியில் விளையாடினேன்.
அவளுக்கு இந்த வெற்றியைச் சமர்பிக்கிறேன். மேலும் பெண்கள் தினத்தில் இந்தக் கோப்பையை வென்றது இன்னும் சிறப்பான ஒரு விஷயமாக இருக்கிறது" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
.png)





English (US) ·