Last Updated:Apr 17, 2026 5:41 PM IST
ஆசிரியராக இருந்தவர், மாணவியை காதலித்து கரம் பிடித்தார். 8 ஆண்டு காதல். யார் இந்த தமிழ் நடிகர் தெரியுமா?

அண்மையில் வெளியாகி ஹிட்டடித்த ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தமிழ் நடிகர் தான் இவர். ஆசிரியராக இருந்தவர், தன்னிடம் படிக்க வந்த மாணவியை 8 வருடங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். இன்று தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். யார் அவர்? அவரது காதல் கதை குறித்து பார்ப்போம்.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘அலைபாயுதே’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். சாக்லேட் பாய் முகம், வசீகரமான தோற்றம் உள்ளிட்ட அம்சங்களால் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். குறிப்பாக இளம் பெண்களின் மனதை கவர்ந்தார் மாதவன்.
அறிமுக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘மின்னலே’ படத்தின் பாடலும், திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் மூலம் மாஸ் ஆக்ஷன் - லவ் என்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்தார் மாதவன். தொடர்ந்து ‘ஆயுத எழுத்து’, ‘அன்பே சிவம்’, ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ என பல படங்களில் நடித்தவர் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படம் மூலம் இயக்குநராக முத்திரை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் 2 பாகங்களும் ரூ.3000 கோடி வசூலை எட்டியுள்ளன.
மாதவனை பொறுத்தவரை அவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். சினிமாவில் நுழைவதற்கு முன் ஆசிரியராக வேலை பார்த்தாராம். அதாவது எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தவர், படிப்பை முடித்ததும் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டாராம். ஆனால், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக, மாணவர்களுக்கு திறன் மேலாண்மை பயிற்சி அளித்து வந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாலம்பூரில் மாணவர்களுக்கு பார்ட் டைமாக திறன் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் வேலை பார்த்துள்ளார் மாதவன். அப்போது தன்னுடைய வருங்கால மனைவி சரிதாவை சந்தித்துள்ளார். சரிதாவை பொறுத்தவரை விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்பது அவருடைய லட்சியம். அதற்காக மாதவனிடம் திறன் மேலாண்மை பயிற்சிக்காக வந்துள்ளார்.
இந்த பயிற்சி நிறைவடைந்த நிலையில் சரிதா, விமான பணிப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, மாதவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சரிதா அவரை இரவு உணவிற்கு அழைத்துள்ளார். இப்படியாக நிகழ்ந்த மாதவன் - சரிதா சந்திப்பு காதலாக மாறியிருக்கிறது.
8 வருடங்களாக இருவரும் காதலித்த நிலையில், 1991-ம் ஆண்டு இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஒரு முறை பேட்டி ஒன்றில் மாதவன், “எந்த கணவரும், மனைவியுடன் வாக்குவாதம் செய்து வெல்ல முடியாது” என குறிப்பிட்டிருந்தார். இந்த தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவதை மாதவன் தவிர்ப்பதில்லையாம்.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை.. வெப்பமும் உயரும்!
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
உள் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம்.
22, 23 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா, தெற்கு கடலோர மாவட்டங்களில் மழை.
.png)




English (US) ·